La Belle – துன்பம் தரும் அழகு........



La Belle (அழகிய பெண்) 2000 த்தில் Kyun Dung Yeo என்பவரது இயக்கத்தில் வெளிவந்த கொரியன் படம்.அமைதி விரும்பும், தனித்து வாழும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில நுழையும் ஒரு பெண், அவனுள் ஏற்படுத்தும் மாற்றங்களே இந்தப் படத்தின் கதை.ஆனால், வழக்கமான காதல் கதையாக இல்லாமல் வேறுபட்டு நின்று, அழகு தரும் துன்பத்தைப் பற்றி அலசுகிறது இந்தப் படம்.




கதையின் ஆரம்பத்தில் கேமரா மெதுவாக நகர்ந்து மேஜை ஒன்றில் நிலைக்கிறது.அதில் உள்ள நாயகனின் டைரி காட்டப்பட்டு,அதில் எழுதப்பட்டு இருக்கும் பக்கங்களில் பயணிக்கிறது கேமரா.நாயகியின் பிரிவு தாங்காமல் நாயகன் எழுதும் சோகக் குறிப்பே அது.அந்நேரத்தில் அழைப்பு மணி அழைக்க, “She returns.....” என்ற வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறது கதை.




நாயகி அவனது வீட்டிற்கு வந்து தங்குவது அது முதல் தரம் அல்ல.பலமுறை அவள் தங்கப்போவதாகவே காட்டிக் கொண்டாலும்,இருவருக்கும் அவள் எப்போது மறைவாள் என்று தெரியாது.பல நேரங்களில் அவளுக்கு வரும் செல்போன் அழைப்பே காரணமாக இருக்கும்.அழைப்பு வந்த சில நேரங்களிலேயே அவள் அதில் ஆர்வத்தோடு பேசுவதும்,’உடனே வருகிறேன்’ என்று விரைவாக கிளம்புவதும்,நாயகன் மறுபடியும் தனிமையில் புழுங்குவதும் எப்போதும் நடப்பதே.


அந்த அழைப்புகள் அனைத்தும் அவளுடைய முன்னாள் காதலனிடம் இருந்து வருகிறது என்று தெரிந்திருந்தாலும்,நாயகியிடம் அழகில் சிறைப்பட்டு இருக்கும் அவனால் ஏதும் செய்ய முடியவில்லை. தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வதைத்தவிர .....


நாயகன் அந்தப் பெண்ணிடம் எல்லையற்ற அன்பும்,காமமும் கொண்டு இருந்தாலும் அந்தப் பெண் ஒரு புதிராகவே இருக்கிறாள்.நாயகனோடு உறவு கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டாத அவள்,தனது பழைய காதலை மறக்க முடியாதவளாகவே இருக்கிறாள்.


அவளை தினமும் பார்த்தாலும்,அவளிடம் இருந்து விலகியே இருப்பதும்,அவளை நெருங்க முடியாததும் அவன் மனத்தை அறுக்கிறது.


இவை அனைத்திற்கும் காரணம் அவளுடைய முன்னாள் காதலனிடம் அவள் வைத்திருக்கும் காதலே என்று நாயகனுக்குத் தெரியும்.ஆனால்,அதே அன்பு அந்த முன்னாள் காதலனுக்கு இல்லாததும் நாயகனுக்குத் தெரியும்.ஆனாலும் எத்தனையோ முறை இரவு நேரங்களில் அவள் குடித்துவிட்டு திரும்பும் போதும்,அவளுடைய முன்னாள் காதலனிடம் அடி வாங்கித் திரும்பும் போதும், தோள் கொடுக்கத் தயாராக,அவள் சோகத்தை குறைக்க ஆவலாக இருக்கிறான். காதல் என்றேனும் கனியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும்,அவளிடம் தான் வைத்திருக்கும் அதிகப்படியான அன்பும்,அதனால் அவள் பிரிந்து விடுவாளோ என்று பயந்து, எதிர்த்துக் கூட பேச பயப்படும் தன்னுடைய கோழைத்தனமும் அவனை வாட்டுகிறது.ஒருநாள் அவள் தன்னுடைய முன்னாள் காதலனை சந்தித்துவிட்டு சந்தோசமாக வந்து அவன் கையில் சிணுங்கும் போது, கத்த வேண்டும்போல் இருந்தாலும், சத்தமில்லாத கதறல் ஒன்றை மட்டுமே வெளியிட முடிகிறது அவனுக்கு....




இவ்வாறு, தன் காதலை உணராத காதலியுடன் அவன் வருந்தும் போது, தன் முன்னாள் காதலனை மறக்க அவனிடம் தஞ்சம் புகுந்து,நாயகனின் obsessive love ஐ வெறுத்து,அவளை சதா அடிக்கும் முன்னாள் காதலனை தேடி ஓடும் அவள், தன் முன்னாள் காதலனின் நிழலை நாயகனின் நிஜத்தில் தேடுகிறாள்.ஆனால் அவளுக்கு மிஞ்சுவதும் ஏமாற்றமே.நாயகனின் obsessive love அவளுக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது.



ஆக,அவள் தன்னுடைய காதலை ஏற்பாள் என்று அவனும், தன்னுடைய முன்னாள் காதலன் தன்னை ஏற்பான் என்று அவளும் காலம் ஏற்படுத்திய சிறையில் சிக்கித் தவிக்கின்றனர்.




ஆனால் ஒருநாள் அவள் பயங்கரமாக அடிபட்டு,குடித்துவிட்டு தன் வீட்டின் முன்னால் கிடப்பதைக் காணும் அவன் அவளுக்கு உதவ விழைகிறான். ஆனால் அவனோடு சண்டை போடும் அவள்,அவன் ஆசை தனக்குத் தெரியும் என்றும்,ஆனால் தனக்கு காதலன் ஒருவனே என்றும்,அவன் அடித்தாலும் அவன் காதலைப் பெறுவேன் என்றும் கூறிவிட்டு தன் காதலனிடம் திரும்பப் போகிறேன் என்று சொல்லிக் கிளம்புகிறாள்.அவளை சமாதானப்படுத்தி தூங்க வைக்கும் அவன் சிந்தனையில் ஆள்கிறான்.


தன்னுடைய கனியாத காதலும்,எங்கே அவள் தன்னைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயமும், அவளை சதா அடித்து அவள் காதலை உணராது அவளை போகப்பொருளாக உபயோகப்படுத்தும் அவன் மீது உள்ள கோபத்துடன் இணைகிறது. காதல் வெறியும்,கோப வெறியும் இணைய நாயகன் அவளுடைய காதலனை தேடித் போய் கொல்கிறான்.


பின்னர் அவளை அழைத்துக் கொண்டு பயணம் போகும் அவன்,யாருமே இல்லாத அழகிய கடற்கரை ஒன்றிற்கு வந்து சேர்கிறான்.அங்கே இருவரும் உண்மையிலேயே சந்தோசமாக நேரத்தை கழிக்கின்றனர்.இவை அனைத்தும் அவள் தன்னுடைய காதலனின் இறப்பை தெரிந்து கொள்ளும் வரையிலே....


சிறிதுநேரத்தில் அவள் பிரிகிறாள்.அவளது பிரிவைத் தாங்க முடியாத அவன் அவள் அழகால் தனக்கு ஏற்பட்டு இருக்கும் பலமின்மையை போக்க விழைகிறான்.சுதந்திரம் பெற ஆசைப்படுகிறான்.என்னதான் தான் எழுதிய குறிப்புகளைக் கிழித்தாலும்,அவளை மறக்க நினைத்தாலும் முடியாததை நோக்கும் அவன், அவள் இருக்கும் வரை தன் காதலும் இருக்கும் என்று உணர்கிறான்.சுதந்திரம் எட்டாக்கனியே என்று அறிகிறான். தன் கையாலாகாததனமும்,இந்தத் தளையில் இருந்து விடுபட வேண்டும் என்ற அவனது வேட்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.



கடற்கரையில் சோகத்தோடு நடக்கும் அவன் பார்வைக்கு அவள் தென்படுகிறாள்.ஆம்,அவள் திரும்பிவிட்டாள்....எப்போது  கைவிட்டுப் போவாள் எனத் தெரியாதவாறு....


அவள் இருக்கும் வரை தன் அடிமைத்தனம் மறையாது என்று உணரும் அவன் அவளைக் கொல்கிறான்.இங்கே,இணையத்தில் ஒரு ரசிகர் குறிப்பிட்டதை போல, தன் உடலையும் மனதையும் ஆக்கிரமித்து,பித்துப் பிடிக்க வைத்த அவளது அழகென்னும் பேயிடம் இருந்து அவன் தப்பினாலும்,இனி காலம் முழுதும் அவளைக் கொன்ற வருத்தத்திலும்,சோகத்திலும் அவன் வாழவேண்டும்.

“In this scene, he has set himself free from one demon, only to inherit another. Released from the physical body of the woman over whom he obsesses, and who has tormented him in every moment of his days, he must then live with interminable guilt and grief.”
- from an user review in IMDB.


காட்சி மாறுகிறது.அழைப்பு மணி விடாமல் அழைக்க,அப்பொழுதே ஆரம்பிக்கப் பட்ட டைரி திறந்திருக்க, “This is the beggining of my writing.She returns....” என்ற வாக்கியத்தோடு முடிகிறது படம்.


இந்தக் காட்சி நமக்குள் ஏற்படுத்தும் கேள்விகள் பல.....

இத்தனை நேரமும் நடந்தது உண்மையா?அல்லது அந்த எழுத்தாளனின் கற்பனையா?(அப்பொழுதே எழுதத் தொடங்கிய அந்த டைரி இதை உறுதிப்படுத்தலாம்.கவனிக்க,நாயகன் அவள் தனிமயைப்போக்கவே எழுத ஆரம்பிகிறான்.)

உண்மையெனில் அந்தக் காட்சி சொல்ல விளைவது என்ன?வேறொரு உறவா?அல்லது அவளை மறக்க முடியாத அவனது நிலையா?அல்லது இது வெறும் remembering ஆ?

கற்பனை எனில் இதை விட சுவாரசியமான கேள்வி எழுகிறது.Eventually,தன்னுடைய obsession எங்கே முடியலாம் என்று உணர்ந்து கொண்ட அவன் இனி செய்யப்போவது என்ன?

இந்தப் படம் உணர்த்த வருவது என்ன?காதலின் உன்மத்தம் இழுத்துச் செல்லக் கூடிய அழிவுப் பாதையா? எதுவாயினும்,இந்தப் படம் சரியாக புரிந்துகொள்ளப் படாத படங்களுள் ஒன்று(நான் கதையை முழுதாக எழுதக் காரணமும் அதுவே).கொரியாவில் வெளியிடப்பட்ட போது நல்ல வரவேற்பை அடையாத இப்படம்,இன்று dvd விற்பனையில் கொடிகட்டுகிறது.....


மிக மெதுவாகச் செல்லும் கதையும், மிக மிக erotic ஆக இருக்கும் காட்சிகளும் முக்கியக் காரணம். ஆனால்,ஒரு nude பைண்டிங்கைப் பார்க்கும் போது , nudeness ஐப் பார்ப்பதோ ,அதன் கலை அழகைப் பார்ப்பதோ பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது....


படத்தின் videography குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று.ஒவ்வொரு பிரேமும் கொள்ளை அழகு.சிம்பிளாக சொல்ல வேண்டுமானால்,கலைநயமும்,அழகும் ஒவ்வொரு பிரேமிலும் மிளிர்கிறது.


Voice over முறைப்படி,நாயகன் விவரிக்க, மெதுவாக செல்லும் கதைக்கு இனிமையான,மெதுவான இசையும்,அருமையான நடிப்பும்,ஆழமான கருத்துடைய monologue உம் துணை புரிந்து உள்ளன....

இந்நேரத்தில் இப்படத்தில் வரும் ஒரு வரி நினைவுக்கு வருகிறது.

“How fearful can love be?
It’s the same as never knowing when to be scared. “

காதலினால் ஏற்படும் உன்மத்தத்திற்க்கு விலை தான் என்ன?


குறிப்பு:இந்தப் படத்தை பார்க்க நினைப்பவர்கள் தனியாகவே பார்க்கவும்.Srtictly for adults......அப்பட்டமான பல எரோடிக் காட்சிகள் நிறைந்தது இது.....Piratebay.org இல் டோரன்ட் கிடைகிறது........


La Belle – அழகு,காதல்,உன்மத்தம்,விடுதலை வேட்கை,கொலை,சோகம்......














குத்தணும் போல இருக்குமே.அதுக்கு தான இத வச்சுருக்கேன்.குத்துங்க.நல்லாக் குத்துங்க. :)

Comments

  1. ஆரம்பிச்சுட்டான்லே கொரியப் பிரஜை!

    ReplyDelete
  2. Thanks rettai...That's because it's a very good film.
    அதுதான் என் review கூட நல்லா தெரியுது. :)

    ReplyDelete
  3. //ஆரம்பிச்சுட்டான்லே கொரியப் பிரஜை!//

    பின்ன ரெட்ட ராஜாங்கத்தின் ப்ரஜன்னா சொல்லிக்க முடியும்?ராஜாங்கத்துல மன்னயே காணோம்.
    அதுவும் போக,ரெட்ட ராஜாங்கம்னாலே ஒரு மாதிரி பாக்குறானுங்க மன்னா...

    ReplyDelete
  4. நல்ல படம்,விமர்சனம்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஒரு ஆங்கிலப் படத்தையும் ஒரு கொரியப் படத்தையும் என் முன் வைத்தால், எனது தேர்வு, கொரியப் படமாகவே இருக்கும். காரணம், கிம் கி டுக். மட்டுமல்லாது, பல கொரியப் படங்களில், கிம் கி டுக் துவக்கி வைத்த பரிசோதனை முயற்சிகலை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சொன்றிருக்கிறார்கள். இப்படம் அதற்கு ஒரு உதாரணம். .

    நல்ல விமர்சனம். Keep Rocking !!

    ReplyDelete
  6. என்ன கொடுமை? மீ த பிப்த்.

    ரிடர்ன் வந்து டீடெயில் ஆக கமென்ட் இடுகிறேன்.

    ReplyDelete
  7. அடடே,

    அடுத்து வருவது (நண்பர் முத்து விசிறி ஏற்கனவே பதிவிட்ட) முத்து காமிக்சா? சூப்பர். எனக்கும் மிகவும் பிடித்த கதை அதுதான். மேல் விவரங்கள் வேண்டுமெனில் அணுகவும்.

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்.. கலக்கறீங்க..

    http://www.imdb.com/title/tt0269546/ இதுதானே? படம் பேரு mi in -னு இருக்கே..

    ReplyDelete
  9. //ஒரு ஆங்கிலப் படத்தையும் ஒரு கொரியப் படத்தையும் என் முன் வைத்தால், எனது தேர்வு, கொரியப் படமாகவே இருக்கும்.//

    இங்கயும் அப்படித்தான். :)

    ஜெய்,அதுவே தாங்க....

    ReplyDelete
  10. ////ஆரம்பிச்சுட்டான்லே கொரியப் பிரஜை!//

    ஆமா.பின்ன ரெட்ட ராஜாங்கத்தின் ப்ரஜன்னா சொல்ல முடியும்?மன்னனையே காணோம்.அதும்போக ரெட்ட ராஜாங்கம்னாலே ஒரு மாதிரி பாக்கானுங்க மன்னா...//

    ReplyDelete
  11. Thanks for your visit and comment Mr.Mailraavanan....

    ReplyDelete
  12. //http://www.imdb.com/title/tt0269546/ இதுதானே? படம் பேரு mi in -னு இருக்கே..//

    அதே தாங்க...

    ReplyDelete
  13. காதல்+ இலுமினாட்டி= கவிதையான பதிவு.. தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே.

    அவள் திரும்புகிறாள்.. அவள் புதியவளாக இருக்கலாம்... மறக்க முடியாத அவன் காதலியின் பிம்பமாக இனி இவன் மாறலாம்.. புதியவள் இவனைக் கொலை செய்யலாம்!!!

    ReplyDelete
  14. //காதல்+ இலுமினாட்டி= கவிதையான பதிவு.. தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே. //

    கவிதையான போஸ்ட் னு சொல்லி பரவால்லாம எழுதுற என்ன அதையும் எழுத விடாம பண்ணிடாதிங்க தல... :)

    //அவள் திரும்புகிறாள்.. அவள் புதியவளாக இருக்கலாம்... மறக்க முடியாத அவன் காதலியின் பிம்பமாக இனி இவன் மாறலாம்.. புதியவள் இவனைக் கொலை செய்யலாம்!!! //

    exactly.... பட்,இது அவனுக்குள்ள நடந்த கற்பனைன்னே நான் நினைக்குறேன்......

    ReplyDelete
  15. //அவள் திரும்புகிறாள்.. அவள் புதியவளாக இருக்கலாம்... மறக்க முடியாத அவன் காதலியின் பிம்பமாக இனி இவன் மாறலாம்.. புதியவள் இவனைக் கொலை செய்யலாம்!!! //

    என்ன கொடுமை சார் இது?

    எண்பதுகளின் மத்திமத்தில் வந்த தமிழ் படங்களில் எல்லாம் படத்தின் முடிவில் இயக்குனர்கள் தங்களின் சொந்தக் குரலில் இது போல சில "கவிதைகளை" சொல்லித்தான் படத்தை முடிப்பார்கள்.

    ReplyDelete
  16. சைட் பாரில் உள்ள படம் மாறி உள்ளதே? காலையில் பார்த்த படத்தில் விலை கிழிக்கப்பட்டு இருக்கும், இந்த ஸ்கேனில் அப்படி இல்லை.

    ReplyDelete
  17. ஆமா பாஸ்,அது ஸ்கேன் நல்லா இல்லாம இருந்தது.அதான்,மாத்திட்டேன்....

    ReplyDelete
  18. எப்புடி நோட் பண்றோம் பாருங்க பாசு.

    ReplyDelete
  19. ஆமா,அது அழுது வடிஞ்சது.இது clarity நல்லா இருக்கு.அதுலயே தெரிஞ்சுருக்கும்.

    ReplyDelete
  20. // ஒரு nude பைண்டிங்கைப் பார்க்கும் போது , nudeness ஐப் பார்ப்பதோ ,அதன் கலை அழகைப் பார்ப்பதோ பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது.... //

    கரக்கிட்டு ஆனா போட்டோ எதுவுமே போடலியே

    போட்டாதானே தெரியும் எங்களப்பத்தி :-))

    ReplyDelete
  21. //ஒரு ஆங்கிலப் படத்தையும் ஒரு கொரியப் படத்தையும் என் முன் வைத்தால், எனது தேர்வு, கொரியப் படமாகவே இருக்கும்//

    ய்ய்ய்ய்ய்ய்ய்யாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!! யாரப் பார்த்து என்னா சொன்னீங்க..

    இலுமியை.. ப்லாக்ல இருந்து தடை பண்ணி.. அவரை.. கோடம்பாக்கத்துக்கு அனுப்புங்கப்பா. அங்கதான் கொரியாவுக்கு நிறைய டிமாண்ட். :) :)

    ReplyDelete
  22. //கரக்கிட்டு ஆனா போட்டோ எதுவுமே போடலியே

    போட்டாதானே தெரியும் எங்களப்பத்தி //

    ஹா ஹா.....
    அது இல்ல பாஸ்.நாலு பேரு வந்து போற இடம்,அதுவும் போக ஏற்கனவே நம்ம எழுதுறத படிச்சுபுட்டே காறி துப்புரானுங்க.இதுல இந்த மாதிரி ஏதாவது பண்ணினா,இன்னும் அதிகமா துப்புவானுங்க.அதான்.. :)

    ReplyDelete
  23. //ய்ய்ய்ய்ய்ய்ய்யாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!! யாரப் பார்த்து என்னா சொன்னீங்க..

    இலுமியை.. ப்லாக்ல இருந்து தடை பண்ணி.. அவரை.. கோடம்பாக்கத்துக்கு அனுப்புங்கப்பா.//

    இப்படி எல்லாம் ரொம்ப பயம் காட்டினா அப்புறம் நான் பாட்டுக்கு இங்கிலீஷ்ல எழுத ஆரம்பிச்சுடுவேன்.அப்புறம் இங்கன வர்ற ஒரு பய உசுரோட போக முடியாது.வசதி எப்படி? ;)


    // அங்கதான் கொரியாவுக்கு நிறைய டிமாண்ட். :) :)//

    ஆனா,இந்த மாதிரி சீன் பை சீன் உருவ எல்லாம் எனக்கு வராதே.என்ன பண்றது?காப்பி அடிக்குறதுன்னாலே எனக்கு சின்ன வயசுல இருந்து அலர்ஜி.அவ்ளோ நல்லவன்!(யாருப்பா அது நமட்டு சிரிப்பு சிரிக்குறது?அட,நம்புங்க..)

    ReplyDelete
  24. ஆங்,அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.இந்த படத்துல இருந்து நாம கத்துகுறது என்ன?





    லவ் பண்ண ஒரு பயலும் வெளங்க மாட்டான். :)

    ReplyDelete
  25. மவனே இன்னொரு முறை கொரிய படங்களை பத்தி எழுதுன...பட்டாபட்டியை விட்டு ஒரிய மொழிப் படங்களைப் பத்தி எழுதவச்சு டார்ச்சர் பண்ணுவான் இந்த ரெட்டை...

    கமான் பட்டு... உன் பராக்கிரமத்தை சினிமா விமர்சனத்துலயும் கொஞ்சம் காட்டிட்டு போ!

    ReplyDelete
  26. விமர்சனம் நன்றாக ரசித்து எழுதப்பட்டு இருக்கிறது.. நன்றி :)

    ReplyDelete
  27. மாப்பு ரெட்டை,நான் அடுத்து என்ன எழுதப் போறேன்னு கேட்டா நீயே கால்ல விழுந்து 'வேணாம்டா.அதுக்கு கொரியா படத்தையே எழுது' னு கதறுவ.என்னவா?யோசி மச்சி.

    ஆங்,அது தான்,அதே தான்.....
    காமிக்ஸ். :)
    மவனே செத்த....

    ReplyDelete
  28. நன்றி பிரசன்னா அவர்களே..

    ReplyDelete
  29. இல்லு நண்பரே,

    தமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
  30. வெடிகுண்டு,

    நமக்கு தண்ணி கொடுக்காத பசங்களுக்கு கூட நாம (வாய்க்கு) அரிசி கொடுக்கிறோம் பாத்திங்களா,அங்க நிக்கான் தமிழன்.

    குறிப்பு: இதில் சுறாவையோ, கடத்திச் செல்லப்படும் ரேசன் அரிசியையோ பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை.... :)

    ReplyDelete
  31. hai thanks for ur welcome. nice movie and nice intro. 9894561034 this is my number and call me when u r free.

    ReplyDelete
  32. இல்லு நண்பரே,

    இன்றைக்குத்தான் இந்த படத்தை பார்த்தேன் - ஒரே வார்த்தை : சூப்பர்.

    தேங்க்ஸ் உங்களுக்கு.

    ReplyDelete
  33. அட,என்ன தேங்க்ஸ்....
    அப்பப்போ வாங்க.இன்னும் பல நல்ல விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்..... :)

    ReplyDelete
  34. கொரிய படம் இங்கே ரொம்ப பிலபலம் போல இலுமி.... அதுவும் கொஞ்சம் டைப் டைப்பாதான்யா விமர்சிக்கிற....

    படங்கள்ல கொஞ்சம் தெளிச்சிருந்தா, ஜகுருதியா பார்த்திருப்போம்ல... பின்ன அப்புறம் எல்லா கனவுன்னு சொல்லிப்பிட்ட கத மாதிறி

    ஹ ஹி ஹி[]

    ReplyDelete
  35. விமர்சனம் சூப்பர்..போட்டோ சூப்பரோ சூப்பர்...ஹி..ஹி

    ReplyDelete
  36. //போட்டோ சூப்பரோ சூப்பர்...ஹி..ஹி //

    போட்டோவுக்கே இப்படியா? படம் சூப்பரோ சூப்பருக்கு சூப்பர்...ஹிஹிஹி.... :)

    ReplyDelete
  37. //அதுவும் கொஞ்சம் டைப் டைப்பாதான்யா விமர்சிக்கிற....//

    என்னங்க பண்றது?variety is the spice of life னு சொல்லுவாங்க....
    அதான்...

    //பின்ன அப்புறம் எல்லா கனவுன்னு சொல்லிப்பிட்ட//

    அதான் தல அதுல ஒரு தனித்தன்மையே.அது உண்மையா இல்ல கற்பனயான்னே தெரியாத அளவுக்கு கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும்.நாமளா முடிவு பண்ணிக்க வேண்டியது தான்...

    ReplyDelete
  38. முதல் முறை வருகிறேன்..
    புகைப்படங்களும் கருத்துக்களும் அருமை.

    ReplyDelete
  39. //முதல் முறை வருகிறேன்..
    புகைப்படங்களும் கருத்துக்களும் அருமை.//

    நன்றி.... :)
    அடிக்கடியும் வாங்க..

    ReplyDelete
  40. உஸ்..... யாராவது இந்த இல்லுக்கு பேதி மாத்திரை குடுங்கப்பா

    ReplyDelete
  41. //உஸ்..... யாராவது இந்த இல்லுக்கு பேதி மாத்திரை குடுங்கப்பா//

    தம்பி,நீ உக்காந்து இருக்குற position ஏ சொல்லுது உனக்கு யாரோ சமீபத்துல தான் கொடுத்து இருக்காங்கன்னு....
    நைசா என்னையும் கோத்து விடலாம்னு பாக்குறியா?அது நடக்காதுடி....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Punisher Max in Tamil.... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…