சிறை மீட்டிய சித்திரக் கதை.......


-->
எச்சரிக்கை:
ஒன்று:இந்தப்பதிவு மிகவும் பெரிது.ஆனால்,ஒரு நல்ல கதையை வாசகர்கள் அறிய வேண்டும் என்ற எண்ணத்திலே வேண்டுமென்றே செய்யப்பட்டது அது.அதிகமான ஸ்கேன்களும் அதற்காகவே....
ரெண்டு:இந்த மாதிரியான கொடுமைகள் இனி அவ்வப்போது தொடரும். :)




நான் பல பேரை சந்தித்து இருக்கிறேன்.அவர்கள் மறக்காமல் கேட்கும் ஒரு கேள்வி: இன்னமும் காமிக்ஸ் படிக்கிறியா என்ன ?
பொதுவாக காமிக்ஸ் என்றாலே ஒரு அபிப்பிராயம் இருக்கிறது நம்மவர்களிடம்.வேறு என்ன, comics குழந்தைக்களுக்கானது என்பதே அது.சரி,காமிக்ஸ் என்றால் என்ன?
அம்புலிமாமா,வாரமலர் போன்றவற்றில் வருவதே காமிக்ஸ் என்று நீங்கள் நினைத்தால்.....
Sorry guys,you are wrong.....
You are wrong big time.....
இத்தாலியில் Tex என்று ஒரு காமிக்ஸ் புக் வருகிறது. அந்த புக் ஒரு இத்தாலியன் வீட்டில் இல்லன்னா அவன இத்தாலியனா  மதிக்க மாட்டாங்கன்னு என் நண்பர் சொல்லக் கேட்டப்போ ஆச்சரியமா இருந்தது....அதோட circulation மட்டும் லட்சங்களில .....
எனக்கு தெரிஞ்ச காமிக்ஸ் பத்தி,அதுவும் எனக்கு பிடிச்ச காமிக்ஸ் பத்தி இனிமே அடிக்கடி பார்க்கலாம். அதிலே உங்களுக்கு உண்மையான காமிக்ஸை நான் அறிமுகப்படுத்துகிறேன்.
அதுல ஒண்ணு தான் இந்த “சிறை மீட்டிய சித்திரக் கதை”.
தலைப்பே கதை சொல்லுது இல்ல......
அதே தான்..நானும் கதை மட்டும் சொல்லத்தான் இங்க வந்துருக்கேன்.Ultimately,story and stuff are what matters......
சரி,கதைய பார்க்கலாம்.....


-->
உலகத்தை சுற்றி பார்க்கச் செல்லும் கெல்லி மெக்கி,பயணத்தின் போது ஒரு பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறான்.காதலர்கள் இருவரும் மால்யா என்ற நாட்டிற்க்கு வரும்போது அங்கே பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.


-->
 
ஒரு குதிரை வீரனது சிலையைக் காணும் மெக்கியின் காதலி பூபி,அதில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விளைகிறாள்.ஆனால் அந்தக்  காதலர்களுக்கு தெரியாத உண்மை யாதெனில்,அந்த சிலை அந்நாட்டு  பேரரசனது சிலை என்பதும்,அதை தொடுவதும் குற்றம் என்ற விசித்திர சட்டம் அந்நாட்டில் இருப்பதும் ....

-->பூபி தேசப்பிதாவை அவமதிதற்க்கதாக குற்றம் சாட்டப்பட்டு,அவளுடைய  மரியாதைக் குறைவான செயலுக்காக சிறையில் அடைக்கப்படுகிறாள்.

கெல்லிக்கும் அவனது தந்தைக்கும் சுமூகமான உறவு இல்லாவிட்டாலும்,தன் காதலியை விடுவிக்க,பணபலமும்,அதிகாரவர்கத்தின் நட்பும் கொண்ட அவரை நாடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லாமல் போகிறது.மெக்கியின் தந்தை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்பு கொண்டு,பூபியை விடுவிக்க நினைத்த போதும் முடியாமல் போகிறது. இப்பிரச்சனையை தீர்க்கவும்,பூபியை காப்பாற்றவும் அவர் சார்லி என்னும் துப்பறிவாளரை நியமிக்கிறார்.

-->
மேலும்,பூபியின் மேல் அவருக்குள்ள அக்கறை பற்றி சார்லி வியக்கும்போது,தனக்கு தன் மகன் மீதே அக்கறை என்றும்,அவனை எப்படியாவது தன் வழிக் கொணர்ந்து ,தன் சாம்ராஜ்யத்தின் வாரிசாக்க வேண்டும் என்பதே தனது அவா என்றும் சொல்கிறார்......
-->
உடனடியாக பயணப்பட்டு அந்நாட்டை அடையும் சார்லி,கெல்லியை சந்திக்கச் செல்கிறார்.கெல்லி அங்கே ஒரு முன்னாள் சர்க்கஸ் குடும்பத்தினரோடு வசிப்பது தெரிய வருகிறது.
 
-->
அவர்களது வீடு பூபியை சிறை வைத்து இருக்கும் கோட்டையை ஒட்டி இருப்பதாலேயே தான் அங்கு வந்து வசிப்பதாகவும்,அவள் எப்போதாவது அவளை உலாவ அனுமதிக்கும்போது அவளைப் பார்க்கும் ஆசையில் தான் தான் அங்கு வந்து தங்கியதாகவும் சொல்கிறான்.மேலும்,அந்தக் கோட்டையில் நுழைந்து அவளைக் காப்பாற்றுவது சுலபமல்ல என்றும் வருந்துகிறான்.



மேலும் அவனிடம் பேசுவதன் மூலம் அவனுக்கு அவனது தந்தை உதவி செய்வார் என்ற நம்பிக்கை இல்லாது இருந்ததையும்,தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, தனது ஆசைப்படி அவன் சித்திரக்காரனாக மாறவே ஆசைப்படுகிறான் என்பதையும் அறிகிறார்.மேலும்,கெல்லிக்கும் அவனது தந்தைக்கும் இருந்த ஒப்பந்தம் பற்றியும் அறிகிறார்.
அதாவது,மகனின் விருப்பத்திற்கு இணங்கி அவனது தந்தை அவனுக்கு ஐந்து வருட கால அவகாசம் தருகிறார் ஒரு சித்திரக்கதை வெளியிடும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த.அதில் அவன் தோற்கும் பட்சத்தில் அவருடைய தொழிலுக்கு வர வேண்டும் என்பதே  அவரகளது ஒப்பந்தம்.
ஆனால்,கெல்லியின் சித்திரக்கதை தரமானதாக இருந்தாலும் அவனால் மற்ற பெரிய நிறுவனங்களையோ,தொலைக்காட்சியையோ எதிர்த்து  வெற்றி பெற முடியவில்லை. அவர்களது ஒப்பந்தம் முடிய இன்னும் அரை வருட காலமே இருக்கிறது.
-->
முன்னாள் சர்க்கஸ் கலைக் குடும்பத்தினரோடே தங்கிக்கொள்ளும் சார்லி அவர்களோடு எளிதில் நெருக்கமாகிறார்.ஒரு நாள்,புகழ் பெற்ற சர்க்கஸ் நிறுவனத்தை நடத்திய சூ குடும்பத்தினர் எதற்காக இப்பொழுது சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை என்று அறிய ஆசைப்படுகிறார்.இது அவர்களுக்கு பழைய விபத்து ஒன்றை ஞாபகப்படுத்தி துன்பப்படுத்துகிறது.குறிப்பாக சூவின் மனைவி மம்மா விற்கு.
-->
பின்னர்,சூ அவ்விபத்தைப் பற்றி சார்லிக்கு விளக்குகிறார்.உயரமான கம்பியில்,கையில் கழியுடன்,பலரை ஏற்றிக்கொண்டு பாலன்ஸ் செய்தவாறு வித்தை காட்டுவதில் வல்லவர் சூ.ஒருநாள் மூனிச் நகரில் வித்தை செய்யும் போது,அவருக்கு வித்தையின் போது ஏற்படும் தும்மல் காரணமாக,நிலைகுலைந்து அவர் சரிய, குடும்பத்தினரில் மூவர் இறந்ததும்,ஒருவர் ஊனமடைந்ததும்,சூ படுகாயமுற்று,அதில் இருந்து மீள  வருடங்கள் ஆனதும்,சூவின் மனைவி மம்மாவை உடைத்துப் போடுகிறது.அவரை சாந்தப்படுத்தும் பொருட்டு தொழிலை நிறுத்தியதாக சொல்லும் சூ,ஆனால் தன்னுடைய பிள்ளைகள் இப்போது ஓய்வாக இருக்கமுடியாமல் தவிப்பதையும் அவர் சொல்லுகிறார்.
   
-->
அவருடைய பேச்சைக் கேட்கும் சார்லிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.கோட்டைக்கும்,அவர்களது வீட்டிற்கும் நடுவே உள்ள இடைவெளியை கயிற்றினால் இணைத்து அதன் மூலம் பூபியை மீட்க திட்டம் இடுகிறார் அவர்.ஆனால்,சூ அது ஆபத்தான பணி என்றும்,அதை செய்யும் திறமையும்,வலிமையும் அவருக்கு கிடையாது என்று சுட்டுகிறார்.சார்லி,கயிற்றில், ஆறு பேரை சைக்கிளில் பாலன்ஸ் செய்ய வல்ல  சூ விடம்,இப்பணியை செய்யுமாறு வேண்டுகிறார்.
முதலில் நடந்த விபத்தைப் பற்றிய  எண்ணத்தினால் அவதியுற்று மறுக்கும் அவர்,பின்னர்,சார்லியின் வேண்டுகோளுக்கு இணங்கி, பூபியை சுமந்து வர ஆள் தேடித் தருவதாக  ஒப்புக்கொள்கிறார்.இதனால் பெரும் பணம் கிடைக்கும் என்பதை அறிந்த அவரது மகன்கள்,சர்கசினை  திறக்க ஆர்வம் கொண்டு,இதில் ஈடுபட விளைகிறார்கள்.ஆனால்,அவர்களைத் தடுத்து தானே போக விழைகிறார் சூ.பூபியை மீட்க திட்டம் தயார் ஆகிறது.பூபியின் எடை,உடலமைப்பு,மனத்திடம் குறித்து தெரிந்து கொள்கிறார்கள்.அவளது எடையை சுமந்து வருவதற்கு ஏற்ற பயிற்சியை ஆரம்பிக்கிறார் சூ.இவை அனைத்தும் மம்மாவிற்கு தெரியாமலே நடைபெறுகிறது.
ஆனால்,இதில் இருக்கும் பிரச்சனைகள் இரண்டு.
ஒன்று: இந்த மீட்பின் போது கயிற்றில் பூபி அடையும் பயம்.
இரண்டு: எந்த வழிமுறையிலும் தொடர்பு கொள்ள முடியாத அவளிடம்,அவளை மீட்க நடக்கும் முயற்சிகளைப் பற்றி தெரியப்படுத்தி அவளை தயார்படுத்துவது.
-->
ஒருநாள் பூபியை பார்க்கும் கெல்லி அவள் கையில் ஞாயிற்றுக்கிழமை வரும் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை இருப்பதையும்,அதில் சித்திரக்கதைப் பக்கத்தை அவள் பார்த்துக் கொண்டு இருப்பதையும் கவனிக்கிறான்.அந்த பத்திரிக்கை ‘பாங்காக் போஸ்ட்’ எனவும்,அது அந்நகருக்கு ஒரு பிரதி மட்டுமே வருவதையும்,அதுவும் சந்தா செலுத்தும் சிறைச்சாலை வார்டனுக்கே கொடுக்கப்படுவதையும் சார்லி அறிந்து கொள்கிறார்.
இதைக் கண்டறியும் சார்லிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.பத்திரிகை கடைக்காரனிடம் தன்னை ஒரு ஆங்கிலப் பயணி என்று அறிமுகம் செய்து கொள்ளும் அவர்,அங்கு வரும் ஒரே ஆங்கிலப் பத்திரிக்கையான அதை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தந்தால்,முன்பே படித்து விட்டு திருப்பித் தந்து விடுவதாக உறுதிகூறி அவனை சம்மதிக்க வைக்கிறார்.
-->பின்னர் பாங்காக்கில் இருக்கும் தன் நண்பன் ஒருவன் மூலம் அதே பத்திரிக்கையை முன்னதாகவே விமானத்தின் மூலம் பெற ஏற்பாடு செய்கிறார்.
பின்னர் கெல்லியை அழைத்து பூபியைக் காப்பாற்றும் முயற்சியில் அவளது உதவி இல்லாது கயிற்றை இணைக்கவோ,அவளைக் காப்பாற்றவோ முடியாது என்பதை விளக்கும் அவர்,அதற்கு, அவளுக்கு தான் காப்பாற்றப்படப் போகும் விஷயத்தை முன்னரே தெரியப்படுத்தி, தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார்.இதனை செயல்படுத்த, தன் யோசனையை கெல்லிக்கு சொல்லுகிறார் சார்லி.
-->
பூபிக்கு தான் காப்பாற்றப்படப் போகும் விசயத்தை,கெல்லி நேசிக்கும் சித்திரக்கதையின் மூலமாகவே சொல்ல ஆசைபடுகிறார் அவர்.கெல்லியிடம் தான் ஏற்கனவே பெற்ற பத்திரிக்கையை கொடுத்து,அதில் இருக்கும் சித்திரக்கதையை நீக்கிவிட்டு,அதற்கு பதிலாக,கெல்லி எழுதிய  சித்திரக் கதையின் கதாநாயகன் பக், சிறையில் இருக்கும் பெண் ஒருத்தியை அவளது உதவியின் பேரில் கயிற்றில் சென்று காப்பாற்றுவது போல படம் வரையச் சொல்லுகிறார்.சித்திரக்கதையில் அவள் கயிறுகளை இணைக்க வேண்டிய விதத்தைப் பற்றி தகவல் கொடுக்கச் சொல்லும்  அவர்,அவளுக்கு சொல்லப்படும் விசயத்தை புரிந்து கொள்ள ஏதுவாக,கதாசிரியர் பெயரில் கெல்லியின் பெயரை போடச் சொல்லுகிறார்.மேலும்,இப்பத்திரிகையை,தான் கடைக்காரனிடம் வாங்கும் பத்திரிக்கையின் இடத்தில் மாற்றி அனுப்பப் போவதாகவும் கூறுகிறார்.
இதனால் அவர் செய்ய ஆசைப்படும் காரியங்கள் இரண்டு.
பத்திரிகையின் சித்திரக்கதைப் பகுதியை  வாசிக்கும் பூபியை ,ஏற்பாடுகளை உணரச் செய்யவும்,உதவி செய்ய தயார் படுத்தவும்  ஆசைபடுகிறார்.
மேலும்,கெல்லியின் தந்தைக்கு சித்திரக்கதையின் அருமையை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாகவும் இதை கருதுகிறார்.
 
-->
திட்டத்தின்படியே கதையைப் படிக்கும் பூபி,உண்மையை தெரிந்து கொள்கிறாள்.தான் செய்ய வேண்டியதை உணர்ந்து  தயார் ஆகிறாள்.தான் உணர்ந்து கொண்டதை கெல்லிக்கு சிக்னல் மூலம் தெரியப்படுத்தவும் செய்கிறாள்.
தப்பிச்செல்ல ஏற்பாடுகள் தயார் ஆகின்றன.நாளும் குறிக்கப்பட்டு,பூபியின் மூலம் தொந்தரவுகள் இல்லை என்று உறுதியும் செய்யப்படுகிறது.
-->
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருக்கும் கவனில் கயிற்றைக் கட்டி,ஒருமுனையில் நங்கூரத்தை சேர்த்து எறியப்படுகிறது.
-->
அந்நேரத்தில் அங்கு வரும் மம்மா,சூ விற்கு இருக்கும் இடுப்புவலியையும்,ஆஸ்துமாவையும் காரணம் காட்டி தடுக்கிறார்.அவளை சமாதானப்படுத்தி விட்டு ,கயிற்றில் ஏறி பூபியை காப்பாற்றச் செல்லுகிறார் சூ.
-->
பூபி என்னும் எலிசா வின் கண்களை கட்டும் சூ,அவளுக்கு ஆறுதல் சொல்லி தைரியம் அளிக்கிறார்.
-->
கொஞ்ச தூரம் கடந்ததுமே ,பூபியை சுமந்து வருவதால் இடுப்புவலி தோன்ற ஆரம்பிப்பதை உணர்கிறார் சூ.இந்நேரத்தில்,மழையும் சேர்ந்து கொள்கிறது. 
-->
போதாத குறைக்கு,பூபி தப்புவதும் உடனேயே உணரப்படுகிறது.மழை வலுக்கிறது.
ஒருபக்கம் பேய் மழையில் கயிற்றில் பாலன்ஸ் செய்ய பிரயாசைப்படும் சூ,மறுபுறம் வலியினால் துடிக்கிறார்.கீழே சுளித்துக்கொண்டு ஓடும் காட்டாறு.மழையின் காரணமாக ஆஸ்துமா அதிகப்பட்டு,மூச்சு விடவும் சிரமப்படுகிறார்.
அவரது சிரமத்தை அறியும் பூபி,அவரை மட்டுமாவது காப்பாற்றும் பொருட்டு,பிடியை விட்டுவிட விழைகிறாள்.
இவை அனைத்தும் போதாது என்று,வார்டன் இவர்களை தடுக்க கோடரியின் துணை கொண்டும்,துப்பாக்கியைக் கொண்டும் முயல்கிறான்.
இனி நடப்பதை சித்திரங்களிலேயே காணுங்கள்.....சித்திரக்கதையின் மகத்துவத்தைப் பற்றி பேசும் கதையின் முக்கிய கட்டத்தை சித்திரத்தின் வழி பார்த்து அதற்க்கு நாம் மரியாதை செய்வோம்.
 
-->
பூபி வந்தவுடன்,அனைவரும் தப்புகிறார்கள். ஏற்கனவே அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால்,தப்புவதற்கு அவகாசம் கிடைக்கிறதே ஒழிய காவலர்களை ஏமாற்றி,எளிதில்  தப்ப முடியவில்லை அவர்களால்.
-->
ஏற்கனவே செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி,ஒரு லாரியில் காரை மறைத்துக் கொண்டு காட்டிற்குள் தப்பிச் செல்லுகிறார்கள்.
-->பின்னர்,அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்புகிறார்கள்.
-->
தனக்கு ஏற்பட்டு இருந்த பயத்தை நீக்கி,தன்னம்பிக்கை அளித்ததற்காக சூ சார்லியிடம்  நன்றி சொல்லுகிறார்.மேலும்,தாங்கள் இனிமேல் சர்க்கஸ் விளையாட்டுகளில் ஈடுபடப் போவதாகவும் அறிவிக்கிறார்.மகனின் சந்தோசத்தை அவனது வார்த்தைகளில் அறியும் தந்தை,உரத்தொழிலில் ஈடுபட அவன் தயங்குவதை கண்டுகொள்கிறார்.மகனின் மனம் ஏங்குவது எது என்று தெள்ளென அறியும் அவர்,காலம் அவனது ஆசையை உறுதிபடுத்தியே இருப்பதையும்,தான் நினைத்தவாறு இது சிறுபிள்ளை ஆசை இல்லை என்பதையும் காண்கிறார்.அவனை அவன் வழியே செல்ல மனப்பூர்வமாக சம்மதிக்கிறார்.எல்லோரும் மகிழும் அந்த முடிவை கண்டு நீங்களும் மகிழுங்கள்.....
-->
சிறை மீட்டிய சித்திரக் கதை,சித்திரக் கதையின் அருமையை உணர்த்தும் கதை மட்டுமன்று.
இக்கதை லட்சியம்,தடங்கல்,வருத்தம்,விடாமுயற்சி,அன்பு போன்ற பல விசயங்களை பற்றி பேசுகிறது.ஆனால்,எல்லாவற்றிலும் ஓங்கி நிற்பது அன்பே.சூ தன் மக்களின் மேல் வைத்திருக்கும் பாசத்தின் காரணமாகவே திட்டத்திற்கு ஒப்புக் கொள்வதும்,முன் பின் அறியாத சூ விற்காக பூபி தன்னுடைய உயிரை விடவும் துணிவதும்,தன் மகன் ஏங்குவது எதற்காக என்று தெரிந்தவுடன்,அவனது விருப்பத்தை நிறைவேற்ற அவனது தந்தை விளைவதும்.....இவை அனைத்தும் அன்பின் காரணமாகவே.
இக்கதையில் சார்லியின் கதாபாத்திரம் மற்றவர்களைப் புரிந்து கொண்டு,அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்கும் நல்லவராகவே வருகிறார்.
கதையில் பூபியை மட்டும் அவர் மீட்காது,கதையில் வரும் பல கதாப்பத்திரங்களையும் அவர்களது மனப் போராட்டத்தில் இருந்து மீட்கிறார்.
தன்னுடைய லட்சியம் பணத்தின் முன் பொடியாவதை கண்டு,தன் தந்தையின் ஆசைக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து வருந்தும் கெல்லிக்கும்,அவனது தந்தைக்கும் சித்திரக்கதையின் மகத்துவத்தை பற்றி புரிய வைக்கிறார்.
மேலும் அவர் சூ விற்கு தன்னம்பிக்கை வர வைக்கிறார்.
தமிழில் சார்லியாக வந்த buz sawyer கதைகளில் சித்திரத் தரம் இருக்காது.ஹீரோயிசம் இருக்காது.ஆனால்,கதைத் தரம் இருக்கும்.நிஜ வாழ்கையை ஒட்டிய கதை ஓட்டம் இருக்கும்.
மிக முக்கியமாக,மனதை லேசாக்கவும் ,பக்குவப்படுத்தவும் ஒரு நல்ல கருத்தும் சொல்லப்பட்டு இருக்கும்.
இக்கதைக்காக நான் பஸ் சாயர் பற்றி அறிந்து கொள்ள தேடியபொழுது ஒரு இனிய சம்பவம் நடந்தது.பஸ் சாயர் கதைகளுக்கான லிங்க் பலவற்றை நான் காண நேர்ந்தது.
ஆக,இப்பத்திவு எனக்கு இரு வகையில் உதவி செய்துள்ளது.
ஒரு மிக நல்ல கதையை திரும்பவும் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
மேலும்,பஸ்சின் கதைகள் பலவற்றை இனிமேல் படித்து மகிழக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது.
இதுவே நான் ரசித்து,நேசிக்கும் காமிக்ஸ்.இப்போது சொல்லுங்கள்,இதைப் போன்ற கதைகளை தேடித் திரியும் எங்களைப் போன்ற காமிக்ஸ் பிரியர்கள் வெறும் சிறுவர்தானா?
ஆமெனில்,நான் சந்தோசமான நினைவுகளைத் தரும் இது போன்ற கதைகளை வாசிக்கும் சிறுவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
பஸ் சாயர் பற்றி அறிய....
http://en.wikipedia.org/wiki/Buz_Sawyer
பஸ் சாயர் ஆங்கில கதைகளுக்கான லிங்க்...
கடைசியாக,தமிழில்,முத்து காமிக்ஸில் வந்த இக்கதை பற்றிய details......
முத்து காமிக்ஸில் இதழ் எண் 42 ஆக வந்த இப்புத்தகம்,இன்னும் பலருக்கு, ஆசிரியர் விஜயன் முதற்கொண்டு, மிகப் பிடித்ததே என்றால் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. செப்டம்பர் மாதம் 1975 இல் தமிழில் வெளியான ‘நல் முத்து’ இது.பின்னர் இது மறுபதிப்பும் செய்யப்பட்டது.
சார்லியின் முதல் கதை இதழ் நிர்:39 ஆன குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் ஆகும்.இது ஆங்கிலத்தில் THE MONKEY BUSINESS என்ற பெயரில் வெளியானது.
இக்கதை தமிழில்,முத்து காமிக்ஸில் சார்லியின் இரண்டாவது ஆகும்.
இந்நேரத்தில் நான் சிலருக்கு நன்றி சொல்ல விளைகிறேன்.
இதைபோன்ற பல நல முத்துக்களை நமக்கு அறிமுகம் செய்த, செய்யும் லயன்,முத்து காமிக்ஸ் குழுமத்தோர்....
என்னிடம் இருந்த அட்டைப்பட ஸ்கேன் பாடாவதியாக இருந்ததால்,அதை முத்து விசிறி ப்ளாக்கில் இருந்து பெற்றுக்கொண்டேன்.மேலும்,இதனுடைய வெளியீட்டு தேதியையும் அவர் ப்ளாக்கில் இருந்தே அறிந்தேன்.அதற்காக அவருக்கு ஏன் நன்றிகள்.
Last but not least, இப்பதிவை எழுத நான் தயங்கிய போது என்னை எழுதத் தூண்டிய கனவுகளின் காதலருக்கு....
அவருக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே.....
“சனியனுக்கு சட போட்டு விட்டு இருக்கீங்கண்ணா.....அது பூ வச்சுப் பாக்காம போகாது ... :)
-->
சிறை மீட்டிய சித்திரக் கதை----- கதையில் சிறை மீட்டினாலும்,கதையால் உங்கள் மனதை சிறை கொள்ளும்.....
 
கடைசியாக,
என்னைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களே,காமிக்ஸிர்க்கு புதியவர்களே.....
நண்பர்களே,தங்கள் வருகைக்கும்,இப்பதிவை இவ்வளவு நேரம் பொறுமையாக படித்ததற்கும் நன்றி.
 இப்பதிவு பலரைச் சென்று அடைய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்,அதற்க்கு வோட்டுப் போடுவது ஒரு வழி.
And guys,do spread the word.Let people know what we like in comics and why we do.... 
   

Comments

  1. friends,முத்து விசிறி எழுதிய பதிவுக்கான லிங்க்....

    http://muthufanblog.blogspot.com/2007/04/sirai-meetiya-siththira-kathai-im-sure.html

    நண்பர்களே,காமிக்ஸ் பற்றிய sweet memories,nostalgia பற்றி இங்கே பேச அழைக்கபடுகிறீர்கள் .....

    Let the nostalgia begin... :)

    ReplyDelete
  2. அப்படியே இதையும் படிங்க...

    http://vennirairavugal.blogspot.com/2010/05/blog-post_26.html


    http://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/

    ReplyDelete
  3. Me the First.

    நண்பர் இல்லுமினாட்டி கமெண்ட்டுகளை நாட்டாமை கேன்சல் செய்ததால், உண்மையில் நானே மீ தி பர்ஸ்ட்

    ReplyDelete
  4. //:இந்த மாதிரியான கொடுமைகள் இனி அவ்வப்போது தொடரும்.//

    வரவேற்கிறேன்.

    ReplyDelete
  5. மிகவும் அருமையான கதை. நான் முதன்முதலில் இந்த கதையை படிக்கும்போது வியந்த காரணம் என்னவெனில் அடிதடி, சண்டை இல்லாமல் இவ்வளவு விறுவிறுப்பாக ஒரு கதையை கொண்டு செல்ல முடியுமா என்ன என்றுதான்.

    குறிப்பாக கயிற்றில் பூபியை சூ தாங்கி வரும்போது அந்த வலியை கதையை ஊன்றி படித்த அனைவருமே உணர்ந்திருப்பார்கள்.

    ReplyDelete
  6. அந்த வெண்ணிற இரவுகள் லிங்க் வேலை செய்யவில்லை. கவனிக்கவும்.

    ReplyDelete
  7. Me the second.

    This is one my favourite book. i have both books (orginal & reprint). I do like Buzz Sawyer comics. Not only this is more stories of sawyer published muthu comics & to my knowledge all of them are very good stories.

    please continue your post. if u want any comics cover scan & download links of any comics, let me know. I'm there to help.
    Mike Blueberry.

    ReplyDelete
  8. விஸ்வா அவர்களே,லிங்க் எனக்கு வேலை செய்கிறதே.ஆனாலும்,இதோ மறுபடியும்...

    http://vennirairavugal.blogspot.com/2010/05/blog-post_26.html

    அப்புறம்,இந்தக் கதையைப் படித்துவிட்டு அதை பிடிக்கவில்லை என்று ஒருவர் சொல்லுவது மிகக் கடினம்.சில நேரங்களில் நிஜ வாழ்கையின் சம்பவங்கள் மிகவும் விறுவிறுப்பாகவே இருக்கும்.நிஜத்தை ஒட்டியே எழுதப்பட்ட இக்கதை தொடரும் விறுவிறுப்பாக இருப்பதில் ஆச்சரியம் என்ன?தங்கள் பதிவை நான் இன்னும் படிக்கவில்லை.படித்துவிட்டு கருத்தை தெரிவிக்கிறேன்.

    அப்புறம்,இன்னைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருப்பதால்,என்னால் எப்போது மறுபடியும் ஆன்லைன்
    வரமுடியும் என்று தெரியவில்லை.so guys,have a ball out here.... :)
    i'll join up later...

    ReplyDelete
  9. //சார்லியின் முதல் கதை இதழ் நிர்:39 ஆன குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் ஆகும்.இது ஆங்கிலத்தில் THE MONKEY BUSINESS என்ற பெயரில் வெளியானது.//

    நண்பரே...

    MONKEY BUSINESS கதைக்கும் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!

    உங்களிடம் புத்தகம் இருக்கும் என எதிர்பார்கிறேன்! நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

    MONKEY BUSINESS 1949-ல் வெளிவந்தது! குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதை நிச்சயமாக 1960களில் அல்லது 70களில் தான் வந்திருக்கக்கூடும்!

    ஏனெனில் நமக்கு பரிச்சயமான செய்தித்தாள் சித்திரத் தொடர் கதைகள் அனைத்துமே இந்த கால கட்டத்தில் வந்தவையேயாகும்!

    மற்றபடி சிறந்த முயற்சி! தொடருங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  10. //தமிழில் சார்லியாக வந்த buz sawyer கதைகளில் சித்திரத் தரம் இருக்காது.//

    இதனை நான் வண்மையாகக் கண்டிக்க்றேன்! பஸ் சாயரின் சித்திர பாணிக்கு நான் மிகப்பெரிய ரசிகன்!

    உங்களிடம் திக்குத் தெரியாத தீவில் கதை இருந்தால் அதை மீண்டும் ஒரு முறை எடுத்துப் பாருங்கள்! அட்டகாசமான சித்திரங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும்!

    கதைத் தொடர் ஆரம்பித்த 1943ல் இருந்த அதே கார்ட்டுன் பாணில்தான் தொடர் முடியும் வரை வரைந்திருப்பார்கள்! இதன் ஓவியர் ராய் க்ரேன் 1943 முதல் அவரது மறைவு (1979) வரை பஸ் சாயருக்கு ஓவியம் வரைந்துள்ளார்! இவர் இறந்து பத்து ஆண்டுகளில் (1989) தொடரை நிறைவு செய்திருப்பர்கள்!

    ஆனால் ரிப் கெர்பி போல் பஸ் சாயரையும் நிறைய பேருக்கு பிடிப்பதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  11. தயவு செய்து உங்கள் வலைப்பூவில் EMBEDDED COMMENTS ENABLE செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    பின்னூட்டமிட மிகுந்த சிரமமாக உள்ளது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  12. உங்கள் பதிவு சைட்-பாரில் அப்டேட் ஆக மறுக்கிறது! ப்ளாக்கர் மிண்டும் மீண்டும் படுத்துகிறது!

    TRY UPLOADING AGAIN!

    உங்கள் பின்னூட்டத்தைக் காணாவிடில் பதிவை மிஸ் செய்திருப்பேன்! நன்றி!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  13. இலுமு , இதை எழுதி ,ஸ்கேன் செய்து உழைப்பு தெரிகிறது.

    ராணி காமிக்ஸ் வந்த முதல் பிரதி முதல் தொடர்ந்து சுமார் நாலு வருஷம் வாங்கி இருக்கிறேன்.

    ReplyDelete
  14. நான் முதல் முதலில் புத்தகமாக படித்தது என்றால், அது காமிக்ஸ் புத்தகங்கள் தான். பின்னாளில் வேறு புத்தகங்கள், திரைப்படங்கள் மீதெல்லாம் பெரும் ஆர்வம் ஏற்பட காரணம் காமிக்ஸ்களே..

    நான் விரும்பி படித்தவை - மாயாவி, அம்புலிமாமா, அப்புறம் மிருகங்கள் மட்டும் வருமே அது (என்ன பேர்?).. சில சமயங்களில் பேர் தெரியாத காமிக்ஸ்களும்..

    அதில் ஒரு கதையை எத்தனை தடவை படித்தேன் என்றே சொல்ல முடியாது.. அதில் வரும் ஒரொரு சித்திரமும் இன்னும் நினைவில் இருக்கு.. கதை என்னவென்றால், ஒரு வாயு வெளியேறி, அனைவரும் வெள்ளை கண்களுடன் Zombie மாதிரி ஆகி விடுவார்கள்.. ஹ்ம்ம்..

    அவை மிகவும் சுவாரஸ்யமானவை..

    ReplyDelete
  15. I will read this story and comment..

    ReplyDelete
  16. நண்பர் பிரசன்னா,

    //கதை என்னவென்றால், ஒரு வாயு வெளியேறி, அனைவரும் வெள்ளை கண்களுடன் Zombie மாதிரி ஆகி விடுவார்கள்.. ஹ்ம்ம்.. //

    நீங்கள் சொல்லும் கதை ராணி காமிக்ஸில் வெளிவந்தது. அந்த இரண்டு வில்லன்களின் பெயர் வெள்ளைக்கண் வாலஸ், பாம்பு பேராசிரியர் போப் ஆகும்.

    இவர்கள் மொத்தம் ஐந்து கதைகளில் வந்துள்ளனர். முதன் முதலில் அவர்கள் வந்த கதையின் அட்டையை காண இங்கே செல்லுங்கள்:

    1st story:ராட்சத பல்லி

    2nd story:மந்திர மண்டலம்

    3rd story: பூனைக்கண் மனிதன்

    ReplyDelete
  17. இல்லுமினட்டி,

    // பஸ் சாயர் பற்றி அறிந்து கொள்ள தேடியபொழுது ஒரு இனிய சம்பவம் நடந்தது.பஸ் சாயர் கதைகளுக்கான லிங்க் பலவற்றை நான் காண நேர்ந்தது.//

    தமிழில் வந்த பஸ் சாயர் கதைகளை முழுவதும் படிக்க இங்கே செல்லவும்:

    1. பஸ் சாயர் - இந்திரஜால் காமிக்ஸ்:ராஜாளி ராஜா

    2. பஸ் சாயர் - இந்திரஜால் காமிக்ஸ்:அறுந்த நரம்புகள்

    ReplyDelete
  18. பஸ் சாயர் - இந்திரஜால் காமிக்ஸ்:ராஜாளி ராஜா = http://pula-sulaki.blogspot.com/2010/04/blog-post.html

    ReplyDelete
  19. ராணி காமிக்ஸ் , லைன் காமிக்ஸ் தீவிரா ரசிகன் நான்

    ReplyDelete
  20. //ராணி காமிக்ஸ் , லைன் காமிக்ஸ் தீவிரா ரசிகன் நான் //

    வாழ்க மங்குனி அமைச்சர்.

    ReplyDelete
  21. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  22. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    ReplyDelete
  23. இல்லுமினாட்டி நண்பரே,
    கலக்கலான பதிவு. சிறந்த கதை இது என முத்து விசிறி பதிவின் மூலம் அறிந்திருந்தேன்.ஆனால் இக்கதையை படித்ததில்லை.இன்று உங்கள் பதிவு வாயிலாக கதையை படித்தது போல் உணர்ந்து விட்டேன்.முழு கதை ஸ்கேன் இருந்தால் கொஞ்சம் மெயில் தட்டி விடுங்களேன்.

    என் நண்பன் ஒருவன் இப்படி தான் காமிக்ஸ் படிப்பதை கேலி செய்து கொண்டு இருந்தான். அவனுக்கு நமது கேப்டன் டைகர் கதைகளை ஒருமுறை படித்து பார் என்றேன்.படித்து விட்டு இப்போது காமிக்ஸ் கதி என கிடக்கிறான்.

    அன்புடன்,
    லக்கி லிமட்

    பாக்டீரியா - ஒரு புகைப்படம், பல தகவல்கள்

    ReplyDelete
  24. நண்பரே,

    நல்லதொரு கதையை சிறப்பான முறையில் பதிவாக்கியிருக்கிறீர்கள்.

    வன்முறையே இல்லாது விறுவிறுப்பாக ஒரு கதையை நகர்த்த முடியுமா எனக் கேட்டால் அதற்குப் பதிலாக இக்கதையை படித்துப் பாருங்கள் என்று கூறலாம். அவ்வளவு மென்மையான கதை.

    ஒரு காதலின் மீட்பு, நொடிந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் மீட்பு, சிதறிப் போய் விடக் கூடிய ஒரு தந்தை மகன் உறவின் மீட்பென அன்பிற்கும் உறவிற்குமிடையில் இரும்புக் கம்பி கட்டி சோதித்துப் பார்க்கிறது கதை.

    சூவின் கதை நெகிழ வைக்கும். அவர் தன் கதையை சார்லிக்கு கூறும்போது அவரின் முகபாவங்கள் சித்திரத்தில் அபாரமாக இருக்கும்.

    சார்லி அமைதியாக திட்டங்களை செயற்படுத்தி மற்றவர்களை தம் அகச் சிறைகளிலிருந்து துணிவுடன் மீண்டு வரச் செய்யும் பாத்திரமாக மிளிர்கிறார். சார்லியின் கதைகள் எனக்குப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

    கம்பிமேல் சூ இறுதியாக நடத்தும் சிறை மீட்பு சாகசம் திக் திக் ரகம். அதுவும் பெண்ணின் பயத்தைப் போக்க அவர் கதைகள் சொல்லுவார். அதில் அவர் கூறும் அந்த மெக்ஸிகோ கதை மனதை கனக்க வைத்து விடும். ஒரு கலைஞனின் வாழ்வு என்பது ரசிகர்களிற்கு வேடிக்கை எனும் பொருளாக மட்டுமே மாறி நிற்பதன் வலி அதில் தெரியும்.

    உங்கள் முயற்சியை பாராட்டி வரவேற்பதோடு, இந்தப் பதிவு உங்களில் சிறை இருந்தது என்பதனையும் நான் சார்லியாக செயற்பட்டு அதனை மீட்டெடுத்தேன் என்பதனையும் கூறிக் கொள்கிறேன் :)) அப்படி எல்லாம் இல்லை நண்பரே. நான் எதுவுமே செய்யவில்லை. எனவே இப்பதிவு வெளிவர என்னைக் காரணம் காட்டாதீர்கள்.

    சிறப்பான உங்கள் பதிவுகளை தொடருங்கள்.

    ReplyDelete
  25. இல்லுமி.. கலக்கல் பதிவு... அப்படியே நம்ம பயங்கரவாதி என்னென்ன விஷயங்கள் சொல்றாரோ அதெல்லாம் சரிபாத்துருங்கப்பு...

    நான் கதையைப் படித்து விட்டு வருகிறேன்..

    ReplyDelete
  26. எனக்கும் மாயாவி கதைகள் ரொம்பப் பிடிக்கும்... சின்ன வயதில் படித்தது.. இரும்புக்கை மாயாவி, காடுகள், வெள்ளைக் குதிரை, வேட்டை நாய், முத்திரை பதிக்கும் மோதிரம், ஸ்டைல்,அப்புறம்,அங்கங்க வரும் ஹீரோயின், சட்டையே பண்ணிக்காத நம்ம தலைவர். ஆஹா இப்பத்தான் ஞாபகம் வருது..நன்றி...

    அப்புறம் முரட்டுக்காளை கார்த் எனக்கு ஓரளவுக்குப் பிடிக்கும்..

    ReplyDelete
  27. well,illumi is back to steal the show... :)

    நன்றி ப்ளுபெர்ரி அவர்களே.....
    சாயர் கதைகள் தரமானவை என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
    :)

    பயங்கரவாதி டாக்டர் செவென் அவர்களே,
    Monkey Business பற்றிய தகவல் என் நண்பன் சொன்னது.அது பற்றி நான் சரிபார்த்து விட்டு நீக்க வேண்டுமானால் நீக்கி விடுகிறேன்.சுட்டிக் காட்டியதற்கு நன்றி...

    //பஸ் சாயரின் சித்திர பாணிக்கு நான் மிகப்பெரிய ரசிகன்!//

    Well,உங்களுக்கு எப்படி பஸ் கதைக்கான சித்திரங்கள் பிடித்ததோ,அதைப் போல எனக்கு அது பிடிக்கவில்லை.It’s a matter of personal opinion.

    இவ்வளவு அருமையான கதைகள் கொண்ட ஒரு சித்திரத்தொடருக்கு சாதாரணமான சித்திரங்கள் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.
    I simply feel that the pics does not do much justice to the superb story......

    //ஆனால் ரிப் கெர்பி போல் பஸ் சாயரையும் நிறைய பேருக்கு பிடிப்பதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது!//

    என்ன செய்வது நண்பரே,நம் ஆட்களுக்கு அடிதடிக் கதைகளே அதிகம் பிடிக்கிறது.

    //இலுமு , இதை எழுதி ,ஸ்கேன் செய்து உழைப்பு தெரிகிறது.//

    you bet my friend..... :)
    and thanks for coming and commenting.....

    //நான் முதல் முதலில் புத்தகமாக படித்தது என்றால், அது காமிக்ஸ் புத்தகங்கள் தான்.//

    நீங்கன்னு இல்ல,பலருக்கும் அதுதான் தமிழே கத்துக் கொடுத்து இருக்கும்.எனக்கும் சேர்த்து.....
    அப்புறம்,கிங் விஸ்வா அவர்கள் சொல்வது சரி தான்.அது வேலஸ்,போப் கதைகள் தான்.விஸ்வா,ராட்சத பல்லி,இதழ் நிர்:20..... ரைட்?

    விஸ்வா அவர்களே,சுட்டிகள் கொடுத்ததற்கு நன்றி.இவைகளையும் கொடுக்க நினைத்து இருந்தேன்.ஆனால்,ஏற்கனவே சொன்னதுபோல,வேலை இருந்ததால் முடியவில்லை.மிக்க நன்றி...
    இரண்டுமே நல்ல கதைகள்....

    //ராணி காமிக்ஸ் , லைன் காமிக்ஸ் தீவிரா ரசிகன் நான்//

    வாய்யா மங்கு.....அப்படியே வந்து கூட்டத்துல சேந்துக்க..... :)

    நன்றி சிபி அவர்களே.....
    நன்றி சரவணக்குமார் அவர்களே....

    //இன்று உங்கள் பதிவு வாயிலாக கதையை படித்தது போல் உணர்ந்து விட்டேன்.//

    அதுக்கு தான தல இவ்ளோ கஷ்டமும்.புக் இல்லைன்னாலும் கதயவாவது தெரிஞ்சுக்கணும்னு தான நான் ஆசைப்பட்டேன்......

    அப்புறம்,ஒருத்தருக்கு காமிக்ஸ் மேல ஆர்வம் ஏற்படுத்த கொடுக்க வேண்டிய புக்ஸ் ஏராளம்.அதுல ப்ளுபெர்ரி அருமையான சாய்ஸ். நான் கொடுத்தது xiii,அப்புறம் ப்ளுபெர்ரி.... :)
    பய இப்ப காமிக்சே கதின்னு கெடக்கான்... :)

    //அவ்வளவு மென்மையான கதை.//

    உண்மை.உண்மை.....

    //ஒரு காதலின் மீட்பு, நொடிந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் மீட்பு, சிதறிப் போய் விடக் கூடிய ஒரு தந்தை மகன் உறவின் மீட்பென அன்பிற்கும் உறவிற்குமிடையில் இரும்புக் கம்பி கட்டி சோதித்துப் பார்க்கிறது கதை.

    சார்லி அமைதியாக திட்டங்களை செயற்படுத்தி மற்றவர்களை தம் அகச் சிறைகளிலிருந்து துணிவுடன் மீண்டு வரச் செய்யும் பாத்திரமாக மிளிர்கிறார். //

    இதுக்கு தான் கவிதைகளின் காதலர் வேணும்னு சொல்றது.சரியான பாயிண்ட் தல....இத சேத்து இருக்கலாம்....

    //அவர் தன் கதையை சார்லிக்கு கூறும்போது அவரின் முகபாவங்கள் சித்திரத்தில் அபாரமாக இருக்கும்.//

    மிகச் சரி.அந்த சித்திரத்தில் உள்ள ஒவ்வொரு கோடும்,வருத்தத்தை சோகத்தையும் ஓங்கிக் காட்டும்.....
    அப்புறம்,சார்லி கதைகள் நான் சின்ன பையனா இருந்தப்போ படிச்சேன்.அப்போ பிடிக்கல.இப்போ பிடிக்குது.அவர் கதைகளுக்கு கொஞ்சம் நிதானமா படிக்கிற குணமும்,பக்குவமும் வேணும் .....

    //அதில் அவர் கூறும் அந்த மெக்ஸிகோ கதை மனதை கனக்க வைத்து விடும். ஒரு கலைஞனின் வாழ்வு என்பது ரசிகர்களிற்கு வேடிக்கை எனும் பொருளாக மட்டுமே மாறி நிற்பதன் வலி அதில் தெரியும்.//

    அந்த ஸ்கேன சேக்கணும்னு நெனச்சேன்.ஆனா ஏற்கனவே அதிகம்.அதான் விட்டுட்டேன்....

    //அப்படி எல்லாம் இல்லை நண்பரே. நான் எதுவுமே செய்யவில்லை. எனவே இப்பதிவு வெளிவர என்னைக் காரணம் காட்டாதீர்கள்.//

    தல,நீங்க பெருந்தன்மையா சொன்னாலும்,உண்மை அதுதான்.....

    சாமு,மாயாவிய மறக்க முடியுமா?பலரோட காமிக்ஸ் வாசிப்பு பழக்கம் மாயாவியிடம் இருந்து தான தொடங்குச்சு.எனக்கும் சேத்து....
    கார்த் எனக்கு அவ்வளவா பிடிக்காது... :)

    ReplyDelete
  28. mr.r.s.k. said, nalla pathivu. but, chithira tharam patri kurai solliruka vendam.athu oru style. aduthu nepolion pokkisham, patri eluthungalen.

    ReplyDelete
  29. mr.r.s.k.said, super pathivu. but,chithira tharam mosamalla... athu oru style.

    ReplyDelete
  30. அனானியாக வந்து கமென்ட் போடுவதும் ஒருவகை ஸ்டைல் தானோ..?

    ReplyDelete
  31. //உங்கள் பதிவு சைட்-பாரில் அப்டேட் ஆக மறுக்கிறது! ப்ளாக்கர் மிண்டும் மீண்டும் படுத்துகிறது!

    TRY UPLOADING AGAIN!

    உங்கள் பின்னூட்டத்தைக் காணாவிடில் பதிவை மிஸ் செய்திருப்பேன்! நன்றி!//

    எனக்கும் இதே !! இன்று காலையில் தான் பார்த்தேன் . . எனது வலைப்பூவிலும் இது வரவில்லை . .

    எனிவே.. இது நல்ல முயற்சி. . அடிக்கடி தொடரவும் !! மனமார்ந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  32. @ விஸ்வா - மந்திர மண்டலம் மற்றும் ராட்சத பல்லி இரண்டுமே எனது மோஸ்ட் ஃபேவரைட் கதைகள். சின்ன வயதில். உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் டக்கென்று நினைவு வந்துவிட்டது . . சூப்பரப்பு !!!

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. சிறப்பான பதிவு. சார்லி கதைகளில் சித்திரம் ரொம்பவும் மோசம் இல்லை. கார்டூன் போல கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை தெளிவாக காட்டும் சித்திர பாணி.

    முத்துவில் வெளியிடப்படாத சார்லி கதைகளை இன்னும் இருக்கும் பட்சத்தில் இவரது கதைகளை முத்துவில் அடிக்கடி வெளியிடலாம்

    ReplyDelete
  35. படிப்பதற்கு முன்னமேயே உங்களது
    இந்த முயற்சியைப் பாராட்டி விடுகிறேன்!
    வாழ்த்துகள்!
    இப்போது படிக்கத் தொடங்குகிறேன்!

    ReplyDelete
  36. நன்றி சிவ்,கருந்தேள்,அண்ணாமலை...

    ReplyDelete
  37. ரொம்ப முயற்சி எடுத்துப் போட்டிருக்கீங்க, காமிக்ஸ் படிச்சுப் பலவருசமாச்சு, இப்போ மீண்டும் தூண்டிவிட்டுட்டீங்க!, நிச்சயம் கொஞ்சம் டைம் எடுத்தாவது படிக்கிறேன்.


    நம்ம கடைய இன்னிக்கும் தொறந்தாச்சுங்கோவ்!

    ReplyDelete
  38. Makkalae..i started reading very happily..but when i ended, ellar melayum kaduppu than...Evvlo books than vechirukkenga ellarum ? Mukkalvasi naan padikkanum-nu nenaichu kedaikaatha books..

    My best wishes to Illuminati.But as you keep writing more, more kaduppu is what i'm gonna get.

    i think we got to setup sharing books atleast amongst us, who know the value of comics.

    ReplyDelete
  39. //My best wishes to Illuminati.But as you keep writing more, more kaduppu is what i'm gonna get.//

    நண்பரே,நல்ல புத்தகங்கள் மக்களை சென்று சேர வேண்டும் என்ற ஆசையில் நான் செய்யும் இந்தக் காரியம் உங்களுக்கு கடுப்பை ஏற்படுதுமாயின்,நான் அதற்காக சந்தோசப் படவே செய்கிறேன்.கிடைக்காத புத்தகங்களை பற்றி எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்ற ஆவலே என் பதிவிற்கு காரணம்.புத்தகம் கிடைக்காதது என் தவறல்ல.it's pure luck. re-prints இல்லாத வரை இந்த மாதிரி நல்ல கதைகள் அதிகம் தெரியாமலே இருக்கும்.

    ReplyDelete
  40. இலுமி,

    முதலில் காமிக்ஸ் பற்றி பதிவுடும் மிக சிறிய ஒரு வட்டத்திற்குள் நீங்களும் சேர்ந்திருப்பதற்கு பிடியுங்கள் பாராட்டுகளை.

    உங்கள் முதல் பதிவாக சிறை மீட்டிய சித்திர கதை என்ற அருமையான ஒரு கதை, அதுவும் சித்திரங்களின் மேன்பை உணர வைக்கும் ஒரு சித்திர புத்தகம் என்பது சரியான தேர்வுதான்.

    உண்மையை சொல்ல வேண்டுமானால் முத்து காமிக்ஸ் படித்து நான் வளரவில்லை. அச்சமயங்களில் ராணி காமிக்சும் சில நேரத்தில் லயன் காமிக்ஸ் மட்டுமே என் கையில் இருந்த பாக்கெட் மணிக்க்கு ஏதுவான ஒன்றாக இருந்தது.... பின்பு பார்ட் டைம் வேலைகளில் கிடைத்த பணத்தை கொண்டு சில பழைய புத்தக கடை வேட்டைகளில் தேடி எடுத்தது தான் முத்து காமிக்ஸின் அறிமுகம்.

    ஆனால் சிறை மீட்டிய சித்திரகதையின் அறிமுக்ம் எனக்கு கிடைத்தது, முத்து விசிறியின் பதிவை ஒட்டி தான். அப்போது நண்பர் ஒருவரிடம் இரவல் வாங்கி படித்த நியாபகம் இன்றும் இருக்கிறது.

    சித்திரங்களை நேசிக்கும் ஓவியன், தான் செய்யும் துறையே சிறந்தது என்று கோளோச்சும் தந்தை, வெகுளித்தனமாக விடயத்தில் மாட்டி கொள்ளும் இளம்பெண், சர்க்கஸ் சாகசங்களை நேசிக்கும் ஆனால் அதே நேரத்தில் அதை விட அதிகமாக தன் குடும்பத்தை நேசிக்கும் ஒரு கலைஞனின் மண போராட்டம்... இவை அனைத்தையும் திறம்பட கையாண்டு மனங்களை ஒன்றினைக்கும் கதாநாயகன் சார்லி என்று கதை உயிரோட்டத்துடன் அமைந்திருக்கும்.

    சார்லியின் சித்திரங்கள் மேம்பட்டவை இல்லை என்ற தங்கள் வாதத்தை நானும் ஏற்கிறேன். அக்காலத்தில் கார்டூன் பாணியில் சித்திரங்கள் வரைந்தவர்கள், காமிக்ஸ் வரைய ஆரம்பித்ததின் வெளிப்பாடின் ஒன்றே சார்லி கதைகள். தங்கள் கார்டூன் பாணியை அவர்கள் இப்படி பட்ட சித்திர கதைகளில் புகுத்தி இருப்பார்கள்.அதே கட்டத்தில் சீரியஸான சித்திர பாங்கை கொண்டவர்களும் களத்தில் இருந்ததால் நம்மால் அவற்றை அதேகால தரத்தில் வேறுபடுத்தி காட்ட முடிகிறது. சித்திரங்களின் நேர்த்தியை ரசிக்கும் நம்மிடம் அவைகள் எடுபடாமல் போகுவது இயல்புதான். ஆனால் இப்படிபட்ட சித்திரங்களை கூட தன் கதை சொல்லும் பாணியில் நம்மை ரசிக்க வைத்த அந்த கலைஞனின் திறமை அரிது தான், இல்லையா?

    நம்மை இவ்வளவு காலம் சென்றும் இக்கதையை ரம்மியமாக நினைவு கூற வைத்தது அது தானே. சார்லி கதைகளை நம் விஜயன் வெளியிட முயல்வாரா என்று தெரியவில்லை, இக்கால ரசிகர்களுக்கு இச்சித்திர ஒவியங்களில் லயித்து கதையை புரிந்த கொள்ள முனைவார்களா என்று சந்தேகமே.

    ஸ்கேன்கள் செய்வதற்காக மொத்த புத்தகத்தையும் சென்டர் பின்னில் இருந்து விலகி பெரிய காரியம் செய்திருக்கிறீர்கள். இது வரை அக்கால காமிக்ஸ் புத்தகங்களை கையுறை போட்டு படிக்காத குறையாக தான் நான் உபயோகித்து வருகிறேன். பதிவில் சிறந்த ஸ்கான்கள் தென்பட வேண்டும் என்ற தங்களின் தியாக உழைப்பு தெரிகிறது. சபாஷ் இலுமி.

    பி.கு.: உங்கள் பதிவை இவ்வளவு நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக முழுவதும் படித்து முடித்து விட்டேன். லேஅவுட் விஷயங்கள் பிரச்சனையாக இருந்தாலும், உங்கள் கதை சொல்லும் பாணி லயித்து படிக்க வைத்தது... அடிக்கடி உங்களை நீங்களே சோம்பேறி என்று வடிவமைத்து கொள்கிறீர்கள்... இத்தனை தாமத பிண்ணூட்டத்திற்கு எனக்கு தான் அந்த பதவிக்கான முழு அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ன சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  41. //முதலில் காமிக்ஸ் பற்றி பதிவுடும் மிக சிறிய ஒரு வட்டத்திற்குள் நீங்களும் சேர்ந்திருப்பதற்கு பிடியுங்கள் பாராட்டுகளை.//

    எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க....
    விடிய விடிய கதை கேட்டு....
    யோவ்,நான் காமிக்ஸ் பத்தி எழுதுறது உமக்கு இப்ப தான் தெரியுதாக்கும்?

    அப்புறம்,நானும் ராணி காமிக்ஸ் படிச்சுகிட்டு இருந்து,பின்ன லயன் க்கு மாறினவன் தான்.

    //இப்படிபட்ட சித்திரங்களை கூட தன் கதை சொல்லும் பாணியில் நம்மை ரசிக்க வைத்த அந்த கலைஞனின் திறமை அரிது தான், இல்லையா?//

    கரெக்டு.

    //அடிக்கடி உங்களை நீங்களே சோம்பேறி என்று வடிவமைத்து கொள்கிறீர்கள்... இத்தனை தாமத பிண்ணூட்டத்திற்கு எனக்கு தான் அந்த பதவிக்கான முழு அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ன சொல்கிறீர்கள்.//

    ஹீ ஹீ ஹீ...
    இந்த reply போடறப்ப பத்து நாளு ஆகி போச்சு நீரு கமெண்ட் போட்டு.இப்ப என்ன சொல்றீறு? :)

    ReplyDelete
  42. no doubt it is good one. i am a sawyer's fan. not an action hero but soft and real hero of comics world. i did'nt have any sawyers book i missed.

    txs,
    rajeshkanna.r

    ReplyDelete
  43. no doubt dear frd it is good one. I appreciate your effort and gift us to read. i am sawyer's fan love him like anything he not an action hero but real and soft.

    I dint have any of his stories missed them all.

    Txs for it.
    Rajeshkanna.r

    ReplyDelete
  44. Mr.Rajesh,

    It is surely an evident thing that sawyers stories are laced with reality and not with action.

    This makes him unique. From one comic fan to another, buddy, it is great pleasure to share. :)

    If you could mail me, I'll send you some links for scans I got in net.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Punisher Max in Tamil.... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

La Belle – துன்பம் தரும் அழகு........

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…